கடவுள் இல்லை என்ற கொள்கையில் இருந்து, பௌத்த மதத்திற்கு சென்று பிறகு, உலக வெற்றிக்கும் மறுமை வெற்றிக்கும் ஒரே மருந்து இஸலாம் மட்டும் தான் என்று உலக தமிழர்களை திரும்பி பார்க்க வைத்து, கடந்த 2010 ஆண்டு பெப்ரவரி மாதம் மக்கா மதினமா நகருக்கு சென்று இஸ்லாத்தை ஏற்றுகொண்ட அப்துல்லாஹ் ( எ ) பெரியார் தாசன் அவர்கள் கடந்த திங்கள் கிழமை அதிகாலை அல்லாஹ்வின் நாட்டப்படி, தாருல் ஃபனாவை விட்டு தாருல் பகா சென்றடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரது ஜனாஸா தொழுகை சென்னை அண்ணா சாலையில் உள்ள மக்கா பள்ளியில் இன்று 20/8/2013 செவ்வாய் கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றது. இதில் அல்ஹம்துல்லாஹ் நானும் கலந்து கொண்டேன். தமிழக தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு அப்துல்லாஹ் அவர்களின் செயல்கள் மற்றும் அவருடைய வாழ்க்கை பற்றி பேசினார்கள். பல்லயாயிர கணக்கான முஸ்லிம் சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹு அப்துல்லாஹ் ( எ ) பெரியார் தாசன் அவர்களின் மறுமை வெற்றி பெற்றவராக ஆக்கி , எனக்கும், வாசிக்ககூடிய உங்களுக்கும் அல்லாஹு மரணத்தை எல்லா நேரமும் நினைத்து வாழ கூடிய பாக்கியத்தை தந்தருவானாக ஆமின் ! ! ! ! !
இவர் 'கருத்தம்மா' எனும் படத்தில் மிக சிறப்பாக தந்தை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.
புகைபடத்தை பெரிதாக பார்க்க படத்தை CLICK செய்யவும்.