நபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமைமிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான (கடமையான) நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள்.
ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி
ரமளான் தரும் 10 பயிற்சிகள்.
1. இறையச்சம்
2. பொருமை
3. சகிப்புத்தன்மை
4.தியாகம்
5. விட்டுக்கொடுத்தல்
6. ஏழைகளின் பசியை உணர்தல்
7. பிறர் நலம் பேணுதல்
8. நல் அமல்களில் ஆர்வம்
9. அர்பனிப்பு
10. ஃபஜ்ரு பாங்குக்கு முன்பே கண்விழித்து பழகுதல்
அல்லாஹ் நம் அனைவருக்கும் இந்த ரமளான் மாதத்தின் நன்மைகள் அதிகம் செய்ய கூடிய ஆர்வத்தையும் ஆசையையும் தந்து, பரிபூரணமாக ஏற்று கொள்வானாக ! ! ! ! ஆமின்.