Friday, October 28, 2011

கூட்டு குர்பானி தொடர்புக்கு

நமது ஊரில் சென்ற வருடம் போல் இந்த வருடமும் கூட்டு குர்பானி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கூட்டு குர்பானில் சேர விரும்பும் சகோதரர்கள் தங்களுடைய பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். 

ஒரு பங்கின் விலை RS 1000/-

தொடர்புக்கு :

செய்யது 
9942449265

Sunday, October 23, 2011

வெற்றி தோல்வி என்பது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வருவதாகும் !

நடந்து முடிந்த ஊராச்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டயிட்ட செய்யது ஒரு சில வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். வெற்றி தோல்வி என்பது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வருவதாகும். ஆகவே அவருக்கு பொறுமையை தந்து இனி வரும் காலங்களில் அவருக்கு மிகபெரும் வெற்றியை கொடுபதற்க்கு அல்லாஹ்விடம் துஆ செய்வோம் . 

நமது ஊர் ஒரு சில மக்களின் புரியாமையின் காரணமாக நம் சகோதரர் பெற வேண்டிய வெற்றி மாற்று மத சகோதருக்கு சென்று விட்டது. இதனால் நமது ஊர் மக்களுக்கு கிடைக்க போகும் நன்மைகள் என்ன ? ? ? ? ? ? நிச்சயாமாக ஒன்றும் இருக்காது......

ஏன் என்றால், அவர் அவருடைய மக்களுக்கு செய்வதற்கு நினைப்பாரா ? அல்லது நம் மக்களுக்கு செய்வதற்கு நினைப்பாரா ? ஏதேனும் நமது ஊருக்கு தேவைகள் இருந்தால், பள்ளிவாசல் பக்கத்தில் இருக்கும் செய்யது இடம் சொல்வது சுலபமா ? அல்லது லாஞ்சியடி-யை தாண்டி இருக்கும் சினையன்- இடம் சொல்வது சுலபமா ? 

செய்யது கு ஆதரவாக வேலை செய்பவர்களிடம், எதிராக வேலை செய்தவர்கள் கேட்ட கேள்வி " நீங்கள் ஏன் கவுன்சிலர் ஹபிபுல்லாஹ் அவரை ஆதரிக்கவில்லை ? அவரும் நமது சமுதாய சஹோதரர் தானே " என்று. சகோதரர்களே ! ! ! நன்றாக புரிந்தது கொள்ளுங்கள். கவுன்சிலர் பதவியை பொறுத்த வரையில் "செய்யானம்" பகுதி நமது கீலமஞ்சகுடி ஊராச்சி இல் இணைந்தது. ஆகவே நாம் வெற்றி பெற வேண்டும் என்றால், செய்யானம் மக்கள் முழுவதும் நமக்கு ஓட்டு அளிக்க வேண்டும் அல்லது கிராமம் முழுவதும் நமக்கு ஓட்டு அளிக்க வேண்டும் அல்லது லாஞ்சியடி முழுவதும் நமக்கு ஓட்டு அளிக்க வேண்டும் ( மதுரை ஓட்டு உட்பட ) இது சாத்தியமா ? ? ? ?
படிக்காத பாமரருக்கு கூட தெரியும் நிச்சயாமாக முடியாது என்று. 

இதில் மிகப்பெரிய வேடிக்கை அல்லது வேதனை என்ன வென்றால், ஜெகத பட்டினம் லாஞ்சியடி ஒப்பந்த படி, கவுன்சிலர் பதவிக்கு போட்டயிட்ட ஹபிபுல்லாஹ் வெறும் சொற்ப வாகுகள் பெற்று உள்ளார், இதன் மூலமாக நாம் அறிவது என்ன வென்றால், லாஞ்சியடி ஓட்டு அவருக்கு விழவில்லை. அவர்கள் ஒப்பந்தத்தை மதிக்கவும் இல்லை, ஓட்டு போடவும் இல்லை.

மேலும் ஆச்சர்யமான உண்மை,  செய்யது மார்க்க பணி மற்றும் சமுக பணி செய்து வந்தாலும், வெறும் சொற்ப வாக்குகள்  மட்டுமே பெறுவார் என்று அனைவராலும் பேசப்பட்டு வந்த செய்யது வெற்றி இன் விளிம்பு வரை சென்று உள்ளார் என்று அணைத்து மக்களும் பேசி வருகிறார்கள், இதன் காரணமாக செய்யது அவரின் மதிப்பு மென் மேலும் உயர்ந்து உள்ளது.

நிச்சியமாக அல்லாஹ் நாட்டம் இல்லாமல் எதுவும் நடக்காது. ஆகவே செய்யது வெற்றிக்காக பாடு பட்ட நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக ! ! ! ! !

بِسْــــــــــــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيم

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
This is Hussain Ali.Msc From Jegatha Pattinam. I studied school education in GHSS school, and I completed Bsc in Jamal Mohamed College-Trichy & completed Msc in Annamalai University-Chidambaram. Now I am working in chennai. ஒரே வரியில் சொல்லுவது என்றால்..... இலக்கின்றி பயணம்....... எதையும் பற்றியும் பற்றாமலும்....

Saddam Hussein صدام حسين

Saddam Hussein صدام حسين