இது என்னுடைய நண்பர் எனக்கு அனுப்பியது. அவர் சவுதி அரேபியா இல் வேலை செய்கிறார்.
தூக்கம்விற்ற காசுகள்:-
இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!
விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது!
நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்
வாசனை இருக்கலாம்!
ஆனால் வாழ்கையில்....?
தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!
எங்கள் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயனத்தூனூடே
விற்றுவிட்டு
கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!
மரஉச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வார விடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!
அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!
பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!
நண்பர்களோடு ஆற்றில்
விரால் பாய்ச்சல்
மாட்டுவண்டி பயணம்
நோன்புநேரத்துக் காஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு - கோழி என
சீசன் விளையாட்டுக்கள்!
ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்ப்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளூர்
உலககோப்பை கிரிக்கெட்!
இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போர்டும் வந்து...
விழிகளை நினைத்து விடுகிறது.!
வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!
மாப்பிள்ளை அலங்காரம்!
கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!
பழையசடங்குகள்
மறந்து போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!
சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!
இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும்" - என்ற
சம்பிரதாய அழைப்பிதழுக்காக
சங்கடத்தோடு
ஒரு
தொலைப்பேசி வாழ்த்தூனூடே
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!
எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து
ஏழைகள்தான்!
காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திகளுக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!
ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்கலெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலேயே...
கரைந்துவிடுகிறார்கள்!
'இறுதிநாள்' நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!
இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டு பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...
பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு...
முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?
கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைப்பேசியில் கேட்கிறோம்!
கிள்ளாமலேயே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ?
ஒவ்வொரு முறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாசப் பார்வை...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு
இப்படி
புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...
தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!
Tuesday, December 22, 2009
Monday, November 23, 2009
கூட்டு குர்பானி தொடர்புக்கு
நமது ஊரில் கூட்டு குர்பானி கொடுக்க விரும்பும் நண்பர்கள் ஆட்டோ SYED அவர்களை யை தொடர்பு கொள்ளவும் ஒரு பங்கு விலை RS 850/
தொடர்பு கொள்ளவேண்டிய தொலை பேசி எண்:9942449265
தொடர்பு கொள்ளவேண்டிய தொலை பேசி எண்:9942449265
தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்
என் அருமை இஸ்லாமிய சகோதரர்களுக்கும் , ஜெகதா பட்டினம் சகோதரர்களுக்கும் என் இதயம் கனிந்த தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்.
அல்லா நாம் அனைவரக்கும் மகிழ்ச்சியும் சந்தோஷம் தண்டருள்வனாக
ஆமின்
அல்லா நாம் அனைவரக்கும் மகிழ்ச்சியும் சந்தோஷம் தண்டருள்வனாக
ஆமின்
Saturday, October 10, 2009
வாசர்களின் எண்ணிக்கை கூடியது !
நமது ஊரில் நடைபெரும் தினம் செய்திகளை தெரிந்து கொள்ளுவதற்காக வெளி நாட்டில் இருந்து வாசர்களின் எண்ணிக்கை கூடியது. சவுதி, மலேசியா, சிங்கப்பூர் மேலும் ஸ்ரீ லங்கா நாடுகளில் இருந்து வாசர்கள் படித்து பயன் பெறுகிறார்கள்.
வெளி வாழ் ஜெகதா பட்டினம் வாசர்கள் இதை போல் முழு ஒஉத்து உழைப்பு தருமாறு கேட்டு கொள்ள படுகிறது.
Source : Tamil BBC News 10/10/2009
வெளி வாழ் ஜெகதா பட்டினம் வாசர்கள் இதை போல் முழு ஒஉத்து உழைப்பு தருமாறு கேட்டு கொள்ள படுகிறது.
Source : Tamil BBC News 10/10/2009
Friday, October 9, 2009
ஹாபிஸ் க்கு திருமணம்
நமது ஊரில் வரக்கூடிய 18/10/2009 Sunday Insha அல்லா ஹாபிஸ் க்கு திருமணம் நடக்க உள்ளது. உள்ளூர் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகிரது. மேலும் வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் இன்ஷா அல்லா duaa பண்ணவும்.
Date:18/10/2009
Place: Raasi Mandapam, Mimisal
Date:18/10/2009
Place: Raasi Mandapam, Mimisal
புது பொலிவுடன் செய்தி தர படும்
நண்பர்களே இனிமேல் புது பொலிவுடன் செய்தி தர படும். மேலும் வீடியோ காட்சி யும் ஊரில் இருந்து நேரடி ஒலி பரப்பு செய்ய படும்.
Tuesday, September 29, 2009
கை பந்து போட்டி ! ! ! !
நமது ஊரில் நோன்பு பெருநாளை முன்னிட்டு கை பந்து போட்டி நடத்த பட்டது. இதில் எட்டு அணிகள் பங்கு கொண்டு விளையாடியது.
இறுதியில் ஸ்டார் அணியினர் சுழற்கோப்பையை தட்டி சென்றனர். அதன் தலைவர் கபூர் அவர் கோப்பையும், பரிசு பொருளையும் பெற்று கொண்டார்.
இறுதியில் ஸ்டார் அணியினர் சுழற்கோப்பையை தட்டி சென்றனர். அதன் தலைவர் கபூர் அவர் கோப்பையும், பரிசு பொருளையும் பெற்று கொண்டார்.
Thursday, September 10, 2009
அபுதாகிருக்கு திருமணம் !
நமது ஊரை சேர்ந்த ஒன்னு பத்து அபுதாகிர் க்கு இன்ஷா அல்லாஹ் ஆறு நோன்பு கழித்து திருமணம் நடக்க உள்ளது. இவர் ஒரு வாரத்திருக்கு முன்பு தான் வெளி நாட்டில் இருந்து ஊரு திரும்பினார்.
மேலும் பொண்ணு ஊரு வெளி ஊரு என்பதால் நியூ தி வி எஸ் எக்ஸ்செல் பைக் வாங்கி உள்ளார். இதை இரவு நேரங்களில் மட்டும் பைக் ஓட்டி பழகி கொண்டு இருக்கிறார் என நன்ப தகுந்த வட்டாரங்கள் தெருவிகிறது.
மேலும் பொண்ணு ஊரு வெளி ஊரு என்பதால் நியூ தி வி எஸ் எக்ஸ்செல் பைக் வாங்கி உள்ளார். இதை இரவு நேரங்களில் மட்டும் பைக் ஓட்டி பழகி கொண்டு இருக்கிறார் என நன்ப தகுந்த வட்டாரங்கள் தெருவிகிறது.
ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்
என் அருமை சகொதரர்தளுக்கு என்னுடைய இதயம் கனிந்த நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் இரு உலகிலும் நன்மை யை புரிதருல்வானாக
ஆமின்
ஆமின்
Wednesday, March 25, 2009
பாரூக்கு திருமணம்
ஹாய்,
இன்ஷா அல்லா வர கூடிய மே மாதம் நமது பாரூக் ( யுஸுப் அண்ணன் ) க்கு திருமணம் நடக்க உள்ளது. அது சமயம் நம்மளுடைய நண்பர்கள் அனைவரும் வருமாறு கேட்டு கொள்ள பட்டு உள்ளது.
நிக்கா நாள் : 03/05/2008 / SUNDAY
இடம் : ஜெகதா பட்டினம்
விருந்து : பிரியாணி
மேலும் மாபிள்ளை பாரூக் சொல்லும் போது, திருமனதிக்கு முதல் நாள் பெரிய பால் போட போவதாக தெரிவித்து உள்ளார்.
இன்ஷா அல்லா அவருடைய திருமண வாழ்க்கை சந்தோசமாக இருக்க வாழ்த்திகிறோம்.
இன்ஷா அல்லா வர கூடிய மே மாதம் நமது பாரூக் ( யுஸுப் அண்ணன் ) க்கு திருமணம் நடக்க உள்ளது. அது சமயம் நம்மளுடைய நண்பர்கள் அனைவரும் வருமாறு கேட்டு கொள்ள பட்டு உள்ளது.
நிக்கா நாள் : 03/05/2008 / SUNDAY
இடம் : ஜெகதா பட்டினம்
விருந்து : பிரியாணி
மேலும் மாபிள்ளை பாரூக் சொல்லும் போது, திருமனதிக்கு முதல் நாள் பெரிய பால் போட போவதாக தெரிவித்து உள்ளார்.
இன்ஷா அல்லா அவருடைய திருமண வாழ்க்கை சந்தோசமாக இருக்க வாழ்த்திகிறோம்.
Subscribe to:
Posts (Atom)