நடைபெற இருக்கும் உள்ளாச்சி தேர்தலில் கீலமஞ்சகுடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மும்முனை போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த 25/9/2011 Sunday சுமார் 4.30 மணி அளவில் தர்கா திடலில் நமது ஊர், கிராமம் மற்றும் லாஞ்சியடிமுக்கிய பிரமுமுகர்கள் ஒன்றாக சேர்ந்து பொது தீர்மானம் உண்டாக்க கூடினார்கள். கிராமம் சார்பாக பேசியவர்கள் நிச்சியமாக இந்த முறை நாங்கள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டி இடுவோம் என்று கூறிவிட்டார்கள். லாஞ்சியடி சார்பாக பேசியவர்கள் ஜெகத பட்டினம் மற்றும் லாஞ்சியடி ஒப்பந்தம் அடிப்படையில் நாங்கள் தான் இந்த முறை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டி இட வேண்டும் என்று கூறிவிட்டார்கள். முடிவில் என்ற ஒரு முடிவும் எடுக்க படாமல் கூட்டம் களைந்து சென்றது.
இந்நிலையில் அவர் அவர் தங்களுடைய நிலையை தெரிவித்து விட்டதால், இந்த முறை நமது ஜமாஅத் சார்பாக யார், எந்த பதவிக்கு போட்டி இடுவார்கள் என்ற முடிவு எடுக்க படாமல் உள்ளது.
No comments:
Post a Comment